Friday, January 15, 2016

தீர்கதரிசி - வாங்குவது விற்பது பற்றி


ஒரு வணிகர்
வாங்குவது விற்பது பற்றி
கேட்டபோது அவர் சொன்னார்:

உலகம் உங்களுக்கு  
பழங்களை விளைவித்து பரிசளிக்கிறது.
அவை தேவையில்லாமல் இருந்தாலும்
அவற்றை எப்படி கைப்பற்றுவது என்பது
உங்களுக்குத் தெரியும்.

பூமியின் அளவற்ற பரிசிலை பண்டமாற்று செய்து
திருப்தி அடைய வேண்டும்
இருந்தாலும் அந்த பரிமாற்றம்
அன்பிலும் நீதியிலும் தவறக் கூடாது
இல்லையென்றால் அது சிலரை பேராசைக்காரராகவும்
மற்றவரை பசித்தவராகவும் ஆக்குவதற்கு வழிவகுக்கும்.

கடலிலும் நிலத்திலும் திராட்சைத் தோட்டத்திலும் உழைத்தவர்கள் 
நெசவாளிகள் குயவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளிகள்
எல்லோரும் சந்தைவெளியில் சந்தித்து;  
மதிப்புகளை மதிப்புகளுடன் மதிப்பீடு செய்ய
உலகின் உன்னத ஆவியை சன்னதம் அழைத்து
தராசுத் தட்டுகளை தூய்மைபடுத்தி நேர்ந்து விடுகிறார்கள்.

.உங்களின் கொடுக்கல் வாங்கல் வணிகத்தில்
வெறுங்கையுடன் வந்து உங்கள் உழைப்பை
வார்த்தைகளால் வாங்க கருதியவர் பற்றி
வருத்தம் அடைய வேண்டாம்.
அப்படிப்பட்டவர்களிடம் தவறாமல் சொல்லுங்கள்:

எங்களுக்கு இருப்பதைப் போலவே
உங்களுக்கும் நிலமும் கடலும்
எல்லையற்றதாகவே இருக்கிறது - ஆதலால்
எங்களோடு வயலுக்கு வாருங்கள்,
எம் உடன்பிறப்புகளுடன்
கடலுக்குச் செல்லுங்கள், வலை வீசுங்கள்என்று

மேலும்
பாடல் ஆடல் குழலிசை கலைஞர்கள்  
சந்தைக்கு கொண்டுவரும்  பரிசில்கள்
கனவுகளின் கவின்கலையாக இருந்தாலும்
உங்கள் உயிர்மைக்கு
உடையாகவும் உணவாகவும் இருக்கும்
அவைகளை நீங்கள் வாங்குவதால்  
அவர்களும் தங்களுக்கு வேண்டிய
பழங்களையும் படையல் பொருள்களையும் வாங்க இயலும்

.உங்களில் சாமானியனும் மனநிறைவு அடையும் வரை
காற்றுவெளியில் இந்த பூமியின் உயிர்மை
அமைதியுடன் உறங்காது என்பதால்
சந்தையை விட்டு வெளியேறும் முன்பு,

யாரும் வெறும் கைகளுடன் திரும்பாமல் பாருங்கள்

No comments: