Monday, December 21, 2015

தீர்கதரிசி - திருமணம் பற்றி (3)

தீர்கதரிசி - திருமணம் பற்றி
பிறகு அல்மித்ரா மீண்டும் பேசும் போது கேட்டார்:
ஆசானே திருமணம் என்பது என்ன?”
அதற்கு அவர் பதில் அளித்தார்

நீங்கள் ஒன்றாக பிறந்தீர் .
எப்போதும் ஒன்றாகவே இருப்பீர்.”

மரணம் உங்கள் நாட்களில் வெண் சிறகடிகும் வரை  
ஒன்றாகவே இருப்பீர்.
இயற்கையின் அமைதியான நினைவுகளிலும்கூட
ஒன்றாகவே இருப்பீர்.”

ஆனால் உங்களிடையே இடைவெளி இருக்கட்டும்..
சொர்கத்தின் காற்று  அங்கே நடனமாடட்டும்..!
ஒருவர் மீது ஒருவர் அன்புகாட்டுங்கள் - ஆனால்
அன்பால் கட்டிப் போடாதீர்கள்..
இருவரின்  இதயக் கரைகளுக்கு இடையே
கடல் கொஞ்சம் அசைந்தாடட்டும்

ஒருவருக்கு ஒருவர் குவளையை நிரப்புங்கள் ஆனால்
ஒரே குவளையில் குடிக்காதீர்
உங்கள் உணவை அடுத்தவருக்குப் பரிமாறுங்கள் - ஆனால்
ஒரே உணவை  ஒரே தட்டில் உண்ண வேண்டாம்.
சேர்ந்து பாடுங்கள் சேர்ந்து ஆடுங்கள் - ஆனாலும் தனியாக.
 பாடுங்கள் பரவசமாக  ஆடுங்கள் ஆனந்தமாக.”

யாழின் நரம்புகள் தனித்தனியானதே - ஆனாலும்
அவைகள் நடுங்கும் போது ஒரே இசையை எழுப்புகின்றன..
வாழ்க்கைக் கரங்களில் தன் இதயத்தை ஏந்தி நிற்பவர்களுக்கு
உங்கள் இதயத்தை கொடுங்கள் -  ஆனால்
கொடுக்காமலே வாங்க எண்ணாதீர்..

சேர்ந்து நின்றாலும் நெருக்கமாக நிற்க வேண்டாம்.
கோயிலின் தூண்கள் இடைவெளி விட்டே இருக்கும்.

ஆலும் வேலும் ஒன்றதன் நிழலில் ஒன்று வளராது

No comments: